பிரச்னைகள் இல்லாமல் வாழ்பவர் யார் சொல்லப் போனால், வாழ்க்கையின் சுவாரஸ்யமே பிரச்னைகள்தான்!
சீடன் ஒருவன் தன் குருவை அணுகி,"தங்கள் அருளால் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றிருப்பினும், ஒன்று மட்டும் எனக்குப் புரிபடவே இல்லை. அதாவது, வாழ்க்கையில் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன; அலைக்கழிக்கின்றன. அவற்றில் இருந்து மீள வழி தெரியவில்லை'' என்றான்.
இதைக் கேட்ட குரு,"நாம் பிறக்கும்போதே பிரச்னை களும் நம்முடன் பிறந்து விடுகின்றன. சிறு வயதில் உனது பிரச்னையை பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள். பருவ வயதில், பிரச்னைகளை நாமே எதிர்கொண்டு வெல்வோம். ஆனால், ஒரு பிரச்னையின் முடிவு மற்றொரு பிரச்னையின் துவக்கம்! பிரச்னைகளைக் களைய களைய ஒன்றன் பின் ஒன்றாய்... புதிது புதிதாக பிரச்னைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஒருவன் இறக்கும் வரை பிரச்னைகளும் இருக்கும்! அவற்றில் இருந்து விடுபட இரண்டு வழிகள் உண்டு.
பிரச்னைகளை லேசாக எடுத்துக் கொண்டு அவற்றை அலட்சியப்படுத்துவது முதல் வழி. அடுத்து... பிரச்னையைத் தலை தூக்க விடாமல் அழித்துவிட வேண்டும். இதற்கு உறுதியான மனம் அவசியம். தர்மசாஸ்திரத்தை நடை முறைப்படுத்தினால், மனம் உறுதி பெறும்.
இன்னொரு விஷயம்... கடமையை எப்படி நிறைவேற்றலாம் என்பது குறித்துக் கவலைப் படலாம். ஆனால், அதன் பலன் குறித்துக் கவலைப்படக் கூடாது. பலனை எதிர்பார்த்தால், பிரச்னைகளை சந்திக்கும் வலு இருக்காது; துயரத் தில் துவண்டு விடுவோம். எனவே, எது வந்தாலும் ஏற்றுக் கொள்!'' என்று அறிவுரை கூறினார்.
நன்றி: அவள் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment